/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மும்மொழிக் கொள்கை அவசியம் வேண்டும்: மக்கள் கருத்து மும்மொழிக் கொள்கை அவசியம் வேண்டும்: மக்கள் கருத்து
மும்மொழிக் கொள்கை அவசியம் வேண்டும்: மக்கள் கருத்து
மும்மொழிக் கொள்கை அவசியம் வேண்டும்: மக்கள் கருத்து
மும்மொழிக் கொள்கை அவசியம் வேண்டும்: மக்கள் கருத்து

மொழி விஷயத்தில்அரசியல் வேண்டாம்
ராமகிருஷ்ணன்: மும்மொழிக் கொள்கை என்பது காலத்தின் அவசியம். ஒரு குழந்தை, 4ல் இருந்து 12 வயது வரை கற்றல், கேட்டல் மற்றும் நினைவாற்றல் திறன் நன்கு இருக்கும்.
நமது கடமை
பரிமளா: எனது இரு மகன்களும் மும்மொழி பயிலும் பாடத்திட்டத்தில் படிக்கின்றனர். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி மூன்றாவது மொழியாக அவர்கள் ஹிந்தி கற்றுள்ளனர். இது ஒரு கூடுதல் தகுதி. இதில் எந்த சிரமமும், கவலையும் இல்லை. சிறு வயது முதலே ஒரு புதிய மொழியைப் பயிலும் போது, எளிமையாக அதில் சிறந்த புலமை பெற முடியும். அவர்கள் வருங்கால நலன் கருதி இதை பயிற்றுவித்து அதில் பயிற்சி பெற வைப்பது நம் கடமை. அதிலிருந்து ஒரு போதும் நாம் தவற வேண்டாம்.
வளர்ச்சிக்கு தடை...
தியாகராஜன்: மும்மொழி என்பது மிகவும் அவசியாமானது. கட்டாயம் மாணவர்கள் மூன்றாவது ஒரு மொழியை கற்று அறிந்து வைத்துக் கொள்வது அவசியம். இது மத்திய அரசு நாடு முழுவதும், சமக்கல்வியை அனைத்து மாணவர்களும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நாமே மண்ணை அள்ளிப் போடுவது போன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் குடும்பத்தினர் என்ன செய்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களை முட்டாளாக்கும் இவர்களின் முயற்சியை மக்கள் அறிவர்.
நல்ல விஷயம் தான்
கதிரேசன்: நம் அனைவருக்கும் கூடுதல் மொழி அறிவு அவசியம். தமிழ் - ஆங்கிலம் மட்டுமின்றி, மேலும் ஒரு மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்வது என்பது இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியம். மும்மொழிக் கொள்கையில், ஏதாவது ஒரு வேற்று மொழி என்று தான் சொல்லப்படுகிறது. அது ஹிந்தி என்று எங்கும் கட்டாயப் படுத்தப்படவில்லை. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான, பயனுள்ள எந்த மொழியையும் கூடுதலாக அறிந்து கொள்வது நல்ல விஷயம் தான்.
தமிழன் கொடி பறக்கும்
சசிகுமார்: தாய்மொழி மற்றும் பொது மொழியான ஆங்கிலத்துடன் மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்வது நிச்சயம் நன்மை தரும். கட்டாயம் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இதில் என்ன தவறு
வனிதா: உலக மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகிறோம். அதே சமயம் இந்தியாவில் உள்ள ஒரு மொழியை கற்றுக் கொள்வதில் ஏன் ஆர்வம் காட்டக் கூடாது. எந்த சிரமமும், அவதியும் இன்றி அதை நாம் கற்றுக் கொள்ளலாம். தொழில் நிமித்தமாக மட்டுமல்ல, பணி நிமித்தமாக எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் அந்த மாநிலத்தின் மொழியை அறிந்து வைத்திருந்தால் எவ்வளவு எளிதாகவும், வசதியாகவும் நாம் அங்கு இருக்க முடியும்.