ADDED : அக் 15, 2025 11:43 PM
உடுமலை: பஸ் ஸ்டாண்டுக்குள் புறநகர் பஸ்கள் செல்லாமல் ரோட்டிலேயே நின்று செல்வதால், மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள் டவுன்பஸ்கள் தவிர புறநகர் பஸ்கள் செல்வதில்லை. புறநகர் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வெளியே, தேசிய நெடுஞ்சாலையில் நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன.
இதனால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அனைத்து பஸ்களும் பஸ்ஸ்டாண்டுக்குள் செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


