Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலவச பட்டா மட்டும் இருக்கு; இடமில்லாமல் பயனாளி தவிப்பு  

இலவச பட்டா மட்டும் இருக்கு; இடமில்லாமல் பயனாளி தவிப்பு  

இலவச பட்டா மட்டும் இருக்கு; இடமில்லாமல் பயனாளி தவிப்பு  

இலவச பட்டா மட்டும் இருக்கு; இடமில்லாமல் பயனாளி தவிப்பு  

ADDED : செப் 03, 2025 11:02 PM


Google News
உடுமலை; உடுமலை அருகே, இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, இடம் ஒதுக்கீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட பயனாளிகள் மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை தாலுகா பண்ணைக்கிணறு கிராமத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 10 ஏக்கர் நிலம், இலவச வீட்டு மனை பட்டா வழங்க கையகப்படுத்தப்பட்டது.

கடந்த, 2014ல், 370 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இலவச வீட்டு மனை பட்டா, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

ஆனால், பயனாளிகளுக்கு உரிய இடத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்து தரவில்லை. எனவே, இலவச வீட்டு மனை பட்டாவிற்கான உத்தரவு நகல்களை மட்டும் கையில் வைத்து கொண்டு, செய்வதறியாமல் பல ஆண்டுகளாக பயனாளிகள் திணறி வருகின்றனர்.

பயனாளிகள் கூறுகையில், 'பண்ணைக்கிணறு கிராமத்தில், வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவால், யாருக்கும் பலன் இல்லை. இடம் எங்கே என தெரியாமலேயே பல ஆண்டுகளாக பரிதவித்து வருகிறோம். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமலும், அருகில் குடியிருப்பு இல்லாத பகுதியை, இலவச வீட்டு மனை பட்டா வழங்க, அதிகாரிகள் தேர்வு செய்கின்றனர். இந்த நடைமுறையை கைவிட்டு, மாற்று இடத்தில், அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us