ADDED : பிப் 25, 2024 12:39 AM
திருப்பூர்;திருப்பூர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் கிட்டான், 56.
கூலி தொழிலாளி. நேற்று மாலை ஊத்துக்குளி இரண்டாவது கேட் அருகே ரயில் ரோட்டைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதி காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர், நேற்றிரவு உயிரிழந்தார். திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.