ADDED : ஜூன் 06, 2025 11:24 PM
- நமது நிருபர் -
தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், வரும் 14ல் மக்கள் நீதிமன்றம் கூடுகிறது.
திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் எட்டு அமர்வு; உடுமலையில் நான்கு அமர்வு மற்றும் பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் தலா 2 அமர்வு என மொத்தம் 20 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படும்.
கோர்ட்களில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள, வாகன விபத்து இழப்பீடு வழக்குகள்; சிவில் வழக்குகள், செக் மோசடி வழக்குகள்; வங்கிவராக்கடன் வழக்குகள், போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்து தீர்வு காணப்படும்.