Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பழமையை பறை சாற்றும் 'அன்னகத்து பாலம்' மேடான பகுதிக்கு நீர் கொண்டு வர அற்புத திட்டம்

பழமையை பறை சாற்றும் 'அன்னகத்து பாலம்' மேடான பகுதிக்கு நீர் கொண்டு வர அற்புத திட்டம்

பழமையை பறை சாற்றும் 'அன்னகத்து பாலம்' மேடான பகுதிக்கு நீர் கொண்டு வர அற்புத திட்டம்

பழமையை பறை சாற்றும் 'அன்னகத்து பாலம்' மேடான பகுதிக்கு நீர் கொண்டு வர அற்புத திட்டம்

ADDED : மார் 19, 2025 07:47 AM


Google News
Latest Tamil News
உடுமலை: உடுமலை அருகே, கல்லாபுரத்தில், 400 ஆண்டுக்கு மேல் பழமையான அன்னகத்து பாலம் எனப்படும் தொட்டிப்பாலம், பல நுாறு ஏக்கர் நிலங்களுக்கு பசுமை அளிப்பதோடு, பல சினிமாக்களிலும் இடம் பிடித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் துவங்கி, கரூர் வரை பயணித்து, திருமுக்கூடலுார் பகுதியில், காவிரி ஆற்றில் கலக்கிறது. ஆற்றின் குறுக்கே, 1957 ம் ஆண்டு அமராவதி அணை கட்டப்பட்டது. ஆனால், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, ஆற்றை மறித்து, தடுப்பணைகள் அமைத்து, வாய்க்கால்கள் வழியாக நீரை திருப்பி, பாசனத்திற்கு முன்னோர்கள் பயன் படுத்தி வந்துள்ளனர்.

இன்றளவும், ராஜவாய்க்கால்கள், வலது கரை கால்வாய்கள் இயற்கை நீர் வழித்தடமாக அமைந்துள்ளன.

இதில், கல்லாபுரம் பகுதியில், மேடான பகுதிக்கு நீர் கொண்டு வர, முற்றிலும் கற்கள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு, 400 ஆண்டுகளுக்கு முன், அன்னகத்து பாலம் எனப்படும் தொட்டிப்பாலம் அமைக்கப்பட்டு, இன்றளவும் நெல் சாகுபடி மூன்று போகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை இப்பகுதி மக்கள், கல்லணை எனவும் அழைத்து வருகின்றனர். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆண்டு முழுவதும் பசுமை, பழமையான தொட்டிப்பாலம், வேளாண் பொருட்கள் காயவைக்க அழகான பாறை என, தமிழ் சினிமாக்களில், இப்பகுதி அதிகம் இடம் பெற்றுள்ளது. இதனை முறையாக பராமரிக்க, நீர் வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த அருட்செல்வன், சிவக்குமார் கூறியதாவது:

அமராவதி ஆற்றின் கரையில் வளம் மிக்க பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதியிலுள்ள கல்லணை என்ற, அன்னகத்துப்பாலம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. அன்னகம் என்பது, மேலும் ,கீழும் ஒட்டாமல், நாக்கு போல் உள்ளதால், அவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

கல்லாபுரத்தின் தெற்குப் பகுதியில், ஆறும், வாய்க்கால் பாசனம் இருந்த போது, வடக்கு பகுதியில் மேடாக உள்ள பகுதிக்கு, நீர் கொண்டு செல்ல, நில மட்டத்திலிருந்து ஆறு அடி உயரத்தில், முற்றிலும், கற்கள், தட்டையான கல் தளம், சுண்ணாம்பு கொண்டு இணைப்பு என, 1.5 கி.மீ., நீளத்திற்கு, ஒரே உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வாயிலாக, இன்றளவும், 450 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது

400 ஆண்டுக்கு முன், இப்பகுதி மக்கள் மின் வசதி இல்லாத போது, இயற்கையான நீருந்து அமைப்பில் இந்த கால்வாய் கட்டப்பட்டுள்ளதும், பழங்காலத்தில், நீர் மேலாண்மையில், சிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதற்கு சான்றாக இன்றளவும் கம்பீரமாக உள்ளது.

இவ்வாறு, தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us