ADDED : ஜூன் 20, 2025 02:30 AM

திருப்பூர் : சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவத் தலைவர்களுக்கான வாக்கெடுப்பு நடந்தது.
வாக்குகள் அடிப்படையில் குழுக்களுக்கான மாணவத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.
பதவியேற்பு விழாவில், பள்ளி அறங்காவலர் மனோகரன், தேர்வான மாணவத் தலைவர்களைக் கவுரவித்தார். மாணவத் தலைவர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர். பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபால் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.