Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மரக்கிளை முறிந்து மாணவன் பலி

மரக்கிளை முறிந்து மாணவன் பலி

மரக்கிளை முறிந்து மாணவன் பலி

மரக்கிளை முறிந்து மாணவன் பலி

ADDED : ஜூன் 29, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலை பகுதியில் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், காங்கேயம் சவுடாம்பிகா நகரைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் அக் ஷயன், 15, பிளஸ் 1 வகுப்பு பயின்று வந்தார்.

நேற்று மாலை 4:00 மணியளவில் வகுப்பு நண்பர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு வகுப்பறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.எதிர்பாராத விதமாக, அங்குள்ள வேப்பமரம் ஒன்றின் பெரிய கிளை முறிந்து விழுந்தது. கிளை விழுந்ததில், அக்ஷயன் அதே இடத்தில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us