Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காங்கேயம் அருகே 10கோடி சொத்துத்திற்காக வளர்ப்பு மகன் சித்தரவதை; பூட்டை உடைத்து அதிரடியாக சிறுவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

காங்கேயம் அருகே 10கோடி சொத்துத்திற்காக வளர்ப்பு மகன் சித்தரவதை; பூட்டை உடைத்து அதிரடியாக சிறுவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

காங்கேயம் அருகே 10கோடி சொத்துத்திற்காக வளர்ப்பு மகன் சித்தரவதை; பூட்டை உடைத்து அதிரடியாக சிறுவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

காங்கேயம் அருகே 10கோடி சொத்துத்திற்காக வளர்ப்பு மகன் சித்தரவதை; பூட்டை உடைத்து அதிரடியாக சிறுவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

ADDED : ஜூலை 09, 2024 08:42 PM


Google News
Latest Tamil News
காங்கேயம்:காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் பகுதியில் சொத்திற்காக 15 வயது சிறுவனை வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதைக்கு ஆளான, சிறுவனை போலீசார் அதிரடியாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர், வசந்தம் நகரை சேர்ந்தவர் நாச்சியப்பகவுண்டர்,65, இவரது மனைவி லட்சுமி,60, இவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஹரிஷ் என்ற ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து, வளர்த்து வந்துள்ளனர். தற்போது சிறுவனுக்கு 15 வயதாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாச்சியப்பகவுண்டர் வாகன விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு 10 கோடி மதிப்பில் நிலம், மற்றும் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. சொத்துகளுக்கு வாரிசாக அவர்களது 15 வயது வளர்ப்பு மகன், ஹரிஷ் பெயருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. வளர்ப்பு மகனுக்கு சொத்துக்கள் செல்வதை விரும்பாத லட்சுமி மற்றும் அவரது உறவினர்கள், சிறுவனை மன ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிறுவனை சினிமா பாணியில் பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, உணவு ஏதும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். நாள் ஒன்றிற்கு அரை டம்ளர் தண்ணீர் மட்டும் கொடுத்தும், இயற்கை உபாதைகள் கழிக்க கை, கால்களை கட்டி கொண்டு கழிவறைக்கு கூட்டி சென்றுள்ளனர்.

மேலும் தன்னை வெளியே விட கூறினால் சிறுவனை அவரது வளர்ப்பு தாயான லட்சுமி அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். சிறுவனை அடைத்து வைத்து துன்புறுத்துவது குறித்து மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா மற்றும் காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சம்பந்தப்பட்ட தோட்டத்திற்கு சென்ற போலீசார் சோதனை செய்ததில் பண்ணை வீட்டில் சிறுவனை அடைத்து சித்தரவதை செய்தது தெரிய வந்தது.

போலீசார் பூட்டை உடைத்து அடைத்து வைக்கப்பட்ட சிறுவனை அதிரடியாக மீட்டனர். பின் மாவட்ட எஸ்.பி., யின் அறிவுறுத்தலின் பேரில் அரசு காப்பகத்தில் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர். சிறுவனை துன்புறுத்திய வளர்ப்பு தாய், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 கோடி சொத்திற்காக சிறுவனை சினிமா பாணியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us