Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில கால்பந்து போட்டி; மாவட்ட அணி தேர்வு

மாநில கால்பந்து போட்டி; மாவட்ட அணி தேர்வு

மாநில கால்பந்து போட்டி; மாவட்ட அணி தேர்வு

மாநில கால்பந்து போட்டி; மாவட்ட அணி தேர்வு

ADDED : ஜூன் 15, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; விருதுநகரில் நடைபெற உள்ள மாநில கால்பந்து போட்டிக்கு செல்ல, 24 பேர் கொண்ட திருப்பூர் மாவட்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் விருதுநகரில் மாநில மாணவர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள திருப்பூர் மாவட்ட அணித்தேர்வு, கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. 2010 மற்றும் 2011ம் ஆண்டு பிறந்த, 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாவட்டம் முழுதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 76 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களில் இருந்து, 24 பேர் கொண்ட உத்தேச அணி தேர்வு செய்யப்பட்டது.

முன்னதாக, திருப்பூர் மாவட்ட கால்பந்து அசோசியேஷன் தலைவர் ரத்தினசாமி, செயலாளர் அன்பழகன் மாவட்ட அணிக்கான தேர்வு போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்ட கால்பந்து அசோசியேஷன் நிர்வாகிகள் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us