/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூன் 17, 2025 12:16 AM

திருப்பூர்; திருப்பூர், காலேஜ் ரோடு, திரு.வி.க., நகர், எல்.ஐ.சி., காலனி, கே.ஆர்.இ., லே அவுட் உள்ளிட்ட பகுதிகளுக்கு சேர்ந்த செல்வகணபதி கோவிலில் நேற்று கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
கடந்த 14ம் தேதி, அதிகாலை விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபி ேஷக விழா துவங்கியது. மகா கணபதி யாகம், மகாலட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் உள்ளிட்ட ேஹாம பூஜைகள் நடந்தன.
அன்று மாலை, கோபுர கலசம், முளைப்பாலிகை, தீர்த்தக்குடம் ஆகியன மரக்கடை பகுதியிலிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடத்தி, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் கொண்டு கும்பாபிேஷகம் நடந்தது.
தசதானம், தச தரிசனம், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. செல்வ கணபதி, தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, துர்கா பரமேஸ்வரி, பாலமுருகன் மற்றும் நவக்கிரக சன்னதிகளில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
கும்பாபிேஷகத்தை, காங்கயம் - சிவன்மலை ஸ்ரீசுப்ரமண்யசுவாமி கோவில் ராஜகணபதி சிவாச்சார்யார் தலைமையில், சிவசுந்தர சந்தோஷ் சிவம் குழுவினர் நடத்தினர்.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்ப் பொதுமக்கள், திரு.வி.க., நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் பாரதி காளிமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இன்று முதல் 48 நாள் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெறவுள்ளது.