ADDED : செப் 16, 2025 10:04 PM
உடுமலை; உடுமலை உழவர்சந்தை முன், காலை நேரங்களில் போடப்படும் தற்காலிக கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் இங்கு வருகின்றனர். காலை நேரங்களில் உழவர்சந்தை முன் தற்காலிக கடைகள் போடப்படுகின்றன.
இதனால், பிற வாகனங்கள் அந்த ரோட்டில் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


