/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு; கல்வியாளர்கள் வலியுறுத்தல் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு; கல்வியாளர்கள் வலியுறுத்தல்
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு; கல்வியாளர்கள் வலியுறுத்தல்
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு; கல்வியாளர்கள் வலியுறுத்தல்
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்பு; கல்வியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 06, 2025 11:34 PM
உடுமலை; மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டத்தை, மீண்டும் புதுப்பிக்க கல்வித்துறை முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
வளர்இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள், பல்வேறு சூழ்நிலைகளால் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதனால், மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பதோடு, தவறான வழிகளையும் தேர்ந்தெடுக்கின்றனர்.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மாவட்டம் வாரியாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக, அரசு பள்ளிகளில் தனித்தனியாகவும், குழுவாகவும், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மாணவர்களின் மனநிலையை, ஆசிரியர்கள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது. தேர்வு நேரங்களில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் இத்திட்டம் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் இத்திட்டம் கொரோனவுக்கு பின், பள்ளிகளில் நிறுத்தப்பட்டு விட்டது.மீண்டும் இத்திட்டம் விரிவான முறையில் செயல்படுத்த வேண்டுமென கல்வி ஆர்வலர்கள், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருந்தது. இப்போது தேர்வு பயம் நீக்குவதற்கும், புகார் அளிப்பதற்கும், ஆலோசனை பெறுவதற்கும் பொதுவான சில தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவுதான். மேலும், அவ்வாறு தேடிச்சென்று ஆலோசனை பெற வேண்டும் என்ற மனநிலை வருவதற்கும், ஒரு தெளிவு வேண்டும். தொண்ணுாறு சதவீத மாணவர்களிடம் அது கிடையாது. அவர்களிடம் கலந்துரையாடினால் மட்டுமே என்ன பிரச்னை என்பதை கண்டறிய முடியும். இதற்கு பள்ளிகளுக்கான உளவியல் ஆலோசனை திட்டம் கட்டாயம் தேவையாகதான் உள்ளது.
இவ்வாறு கூறினர்.