Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ டிரான்ஸ்பார்மரில் ஏறி போராட்டம்; ஜப்தி நடவடிக்கையில் பரபரப்பு

டிரான்ஸ்பார்மரில் ஏறி போராட்டம்; ஜப்தி நடவடிக்கையில் பரபரப்பு

டிரான்ஸ்பார்மரில் ஏறி போராட்டம்; ஜப்தி நடவடிக்கையில் பரபரப்பு

டிரான்ஸ்பார்மரில் ஏறி போராட்டம்; ஜப்தி நடவடிக்கையில் பரபரப்பு

ADDED : ஜூன் 18, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
பல்லடம்; பல்லடத்தை அடுத்த, சுக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜகோபால், 42; விவசாயி. கடந்த, 2015ல், கோவை, பேரூர் பாங்க் ஆப் பரோடா வங்கியில், 1.48 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், 2023ல், கோர்ட் உத்தரவு பெற்று, இவரது சொத்துக்கள் ஏலத்துக்கு வந்தன. ராஜகோபால், ஏலத்துக்கு விடாமல் தட்டிக்கழித்து வந்துள்ளார். மீண்டும், கோர்ட் உத்தரவு பெற்று, 52 சென்ட் இடத்தை ஜப்தி செய்ய வங்கியினர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வந்தனர்.

எதிர்ப்பு தெரிவித்த ராஜகோபால், அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார். போலீசார் உத்தரவின்படி, மின் இணைப்பு தண்டிக்கப்பட்டு, ராஜகோபால் கீழே இறக்கிவிடப்பட்டார். அதற்குள், அவரின் உறவினர்கள் அங்கிருந்த உயர்மின் கோபுரத்தின் மீது ஏறினர்.

தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனையடுத்து, 52 சென்ட் இடம் கோர்ட் உத்தரவுப்படி, பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us