ADDED : ஜன 08, 2024 01:11 AM
திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் 31 எண்ணிக்கையில் உள்ளன. இவற்றின் மூலம் கடந்த 2023ம் ஆண்டில், 58,702 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக பிரசவ தேவைக்கு, 16,500 பேரும், விபத்தில் சிக்கியவரை மீட்க, 9,899 பேரும், 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். 'திடீர்' நெஞ்சுவலி காரணமாக, 4,065 பேர், இதர மருத்துவ தேவைக்கு, 28,237 பேர், 108 ஆம்புலன்ஸ்ைஸ உதவிக்கு அழைத்துள்ளனர்.
வீட்டில் பிரசவம்
பிரசவ வலி ஏற்பட்டு, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்த வரும் வழியில், 22 குழந்தைகள் பிறந்துள்ளன. 108 ஆம்புலன்ஸ் டெக்னீசியன், செவிலியர் சென்று மருத்துவம் அளித்தபின், வீட்டில், 66 பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு, சுகபிரசவத்தில் நலமுடன் குழந்தை பிறந்துள்ளது.