Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா

சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா

சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா

சுடலை மகாராஜா கோவில் பொங்கல் விழா

ADDED : செப் 07, 2025 10:37 PM


Google News
Latest Tamil News
அனுப்பர்பாளையம்; திருப்பூர், செட்டிபாளையம் தியாகி குமரன் காலனியில் ஸ்ரீ சுடலை மகாராஜா, முண்டன் சுவாமி, ஸ்ரீ ராஜ காளியம்மன், ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ பிரம்மசக்தி கோவில் உள்ளது.

இதன் 19ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 7ல் துவங்கியது. இன்று மாலை பக்தர்கள் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக வருதல், இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது; அன்னதானம் வழங்கப்படுகிறது.

நாளை (9ம் தேதி) காலை 7:00 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வருவர். மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை, கணியான் அழைப்பு, இரவு 8:00 மணிக்கு படைக்கலம் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், இரவு 9:00 மணிக்கு சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, இரவு 11:00 மணிக்கு மாசாண சுடலை ஈஸ்வரர் மயான வேட்டைக்கு செல்லுதல், சுடலை மகாராஜா கொதிக்கும் நீரில் குளித்தல் ஆகிய வற்றை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

வரும் 10ம் தேதி காலை 8:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வருதல் மற்றும் பொங்கல் வைத்தல், மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை தொடர்ந்து வில்லுப்பாட்டு, இரவு 10:00 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்த்தல், 11ம் தேதி மதியம் 11:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us