/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எங்கெங்கு காணினும் பாலிதீன் பயன்பாடு! அதனை தவிர்க்காவிட்டால் மக்களுக்குத்தான் பெரும்பாடு எங்கெங்கு காணினும் பாலிதீன் பயன்பாடு! அதனை தவிர்க்காவிட்டால் மக்களுக்குத்தான் பெரும்பாடு
எங்கெங்கு காணினும் பாலிதீன் பயன்பாடு! அதனை தவிர்க்காவிட்டால் மக்களுக்குத்தான் பெரும்பாடு
எங்கெங்கு காணினும் பாலிதீன் பயன்பாடு! அதனை தவிர்க்காவிட்டால் மக்களுக்குத்தான் பெரும்பாடு
எங்கெங்கு காணினும் பாலிதீன் பயன்பாடு! அதனை தவிர்க்காவிட்டால் மக்களுக்குத்தான் பெரும்பாடு

தாராள புழக்கம்!
சிறிய பெட்டிக்கடை முதல், பெரிய மால்கள் வரை பாலிதீன் பைகள், பல்வேறு வடிவங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. மண்ணில் மக்கி, மண் வளத்தையும் அது சார்ந்த விளைபொருட்களை கூட, நஞ்சாக மாற்றும் பேராபத்து பாலிதீன் பைகளில் இருக்கிறது, என விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கின்றனர்.குப்பையோடு குப்பையாக மண்ணில் கொட்டப்படும் பாலிதீன், மண்ணில் மக்காமல், மண்ணை மலடாக்கிக் கொண்டிருக்கிறது. குப்பையை கிளறி, பாலிதின் பைகளோடு கலந்திருக்கும் உணவு மிச்சங்களை உண்ணும் கால்நடைகளின் வயிற்றில் பாலிதீன் பை தேங்கி, அவற்றின் உயிரை காவு வாங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடக்கின்றன.
வேண்டாமே வெத்து காரணம்
'லட்சக்கணக்கான மக்கள் வாழும் திருப்பூரில் பிளாஸ்டிக் புழக்கத்தை கட்டுப்படுத்துவது கடினம்; மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது என்ற காரணம், பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், திருப்பூரை விட பன்மடங்கு வளர்ச்சி பெற்ற பெங்களூரு உள்ளிட்ட பல பெரு நகரங்களில் கூட பாலிதீன் புழக்கம் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் அதுதொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனால், திருப்பூரில் விழிப்புணர்வும் போதியளவில் இல்லை. பாலிதீன் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடம் வருவதில்லை.
உயிருக்கு வேட்டு
ஏற்கனவே, கேன்சர் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய் பரவல் அதிகரித்து வரும் திருப்பூரில், இனியும், பாலிதீன் அரக்கனை கட்டுப்படுத்தாமல் இருந்தால், மக்களின் ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும் என, அச்சம் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.நேற்று, சர்வதேச நெகிழி தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் அரசு துறை அலுவலகங்கள், தனியார் பள்ளி, கல்லுாரிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் சார்பில், பாலிதீன் தவிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆனால், அவற்றின் பலன் பூஜ்யம் என்று தான் சொல்ல வேண்டும்.எனவே, வரும் நாட்களிலாவது, பாலிதீன் தவிர்ப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.