Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோரத்தில் மரக்கன்று நடவு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ADDED : செப் 04, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
உடுமலை; குமரலிங்கம் ரோட்டில், நெடுஞ்சாலைத்துறையால், மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாப்புக்காக, தடுப்புகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும், மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில், மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.

தற்போது, காரத்தொழுவு - குமரலிங்கம் ரோட்டில், 4 வது கி.மீ., ல், நாவல் மற்றும் வேப்பமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. கால்நடைகளால், மரக்கன்றுகள் பாதிப்பதை தவிர்க்க, தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

பிற மாவட்ட முக்கிய சாலைகளிலும் மரக்கன்றுகள் விரைவில் நடவு செய்யப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us