Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குப்பை லாரியை தடுத்து நிறுத்திய மக்கள்

குப்பை லாரியை தடுத்து நிறுத்திய மக்கள்

குப்பை லாரியை தடுத்து நிறுத்திய மக்கள்

குப்பை லாரியை தடுத்து நிறுத்திய மக்கள்

ADDED : ஜூன் 12, 2025 06:27 AM


Google News
Latest Tamil News
அனுப்பர்பாளையம்: நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரியை த.வெ.க.,வினர் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினசரி 800 டன் குப்பைகள் சேகரமாகின்றன.

சேகரமாகும் குப்பைகள், நெருப்பெரிச்சல் பத்திர பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்படுகின்றன.

சில நாட்கள் முன், 'துர்நாற்றம் வீசுகிறது' என்று கூறி, அப்பகுதியினர், குப்பை கொட்ட வந்த லாரியை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த அதிகாரிகள் 'துர்நாற்றம் வீசாத வகையில் கிருமி நாசினி தெளிக்கப்படும்' என வாக்குறுதி அளித்தனர். கிருமி நாசினி தெளித்து, தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வந்தது.

நேற்று தமிழக வெற்றி கழகத்தினர் மற்றும் அப்பகுதியினர், 'தொடர்ந்து துர் நாற்றம் வீசுகிறது. குடியிருக்க முடியவில்லை. இனி இங்கு குப்பை கொட்ட கூடாது' என குப்பை லாரியை சிறை பிடித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கட்சி மற்றும் பொது மக்களை சமாதானம் செய்தனர். மண் போட்டு, துர்நாற்றம் வீசாதவாறு பார்த்து கொள்வதாக கூறினர்.

பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை.

அதிகாரிகள், 'இனி இங்கு குப்பை கொட்ட மாட்டோம்' என உறுதி கூறியதை தொடர்ந்து, கட்சியினர் சிறை பிடித்த லாரியை விடுவித்தனர்.

---

நெருப்பெரிச்சல் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்த மக்கள்.

குப்பைகள் தேங்கும் அவலம்

மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கென தனி இடவசதி இல்லை.இதனால் ஆங்காங்கே உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன.குப்பை கொட்டும் இடமெல்லாம் 'நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது; துர்நாற்றம் வீசுகிறது' என அப்பகுதி மக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறை பிடித்து வருகின்றனர். குப்பை கொட்ட இடமின்றி அதிகாரிகள் திணறி வருகின்றனர். மாநகரில் குப்பை தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது..........







      Our Apps Available On




      Dinamalar

      Follow us