Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

குமரலிங்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

ADDED : மார் 27, 2025 11:47 PM


Google News
உடுமலை: உடுமலை அருகே கொமரலிங்கத்தில், பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் தடத்தில், கொமரலிங்கம் அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது. ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிற்க இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயங்களில் சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, கொமரலிங்கத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில், உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். இதன் வாயிலாக அங்கு போக்குவரத்து நெரிசல் தீர வாய்ப்புள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us