/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.ஏ.பி, நீர் திருட்டு தடுக்க வலுக்கும் எதிர்பார்ப்பு பி.ஏ.பி, நீர் திருட்டு தடுக்க வலுக்கும் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி, நீர் திருட்டு தடுக்க வலுக்கும் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி, நீர் திருட்டு தடுக்க வலுக்கும் எதிர்பார்ப்பு
பி.ஏ.பி, நீர் திருட்டு தடுக்க வலுக்கும் எதிர்பார்ப்பு

பொறியாளர் அலுவலகம்24ல் முற்றுகையிட முடிவு
வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ள விவசாயிகள், கால்நடைகளுடன், பெருந்திரளாக செல்வதென முடிவெடுத்து, ஒவ்வொரு கிராமம், கிராமமாக ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, விவசாயிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
நான்கில் மூன்று மடங்குதண்ணீர் திருட்டு
பி.ஏ.பி., வெள்ளகோவில கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது;பி.ஏ.பி., சட்ட விதிகளின் படி, சமச்சீராக பாசனத்திற்கு நீர் வினியோகிக்கப்பட வேண்டும். ஆனால், பொங்கலுார் உட்கோட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட வேண்டிய நீரில், நான்கில் மூன்று மடங்கு மடைமாற்றி, பகிரங்கமாக நீர் திருட்டில் ஈடுபடுகின்றனர். பி.ஏ.பி., கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பூர் தெற்கு கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு வழங்கியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை; வேறு வழியின்றி, முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.