Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்

ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்

ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்

ஆம்னி பஸ்கள் நிறுத்தம்; போக்குவரத்து நெரிசல்

ADDED : ஜூன் 24, 2025 10:10 PM


Google News
உடுமலை; உடுமலை பை-பாஸ் ரோட்டில், இரவில் நிறுத்தப்படும் ஆம்னிபஸ்களால் போக்கவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உடுமலையில் இருந்து சென்னை உட்பட தொலைதுார பகுதிகளுக்கு, 25க்கும் அதிகமான 'ஆம்னி' பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும், இரவு 8:00 மணிக்கு மேல், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலை ஒட்டி, பை-பாஸ் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.

பயணியர் ஏறும் வரை வரிசையாக, நிறுத்தப்படும் 'ஆம்னி' பஸ்களால், அவ்வழியாக பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில், பை-பாஸ் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.

இப்பிரச்னைக்கான தீர்வு குறித்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார், ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்த்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us