/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கூடுதலாக செலுத்திய வரித்தொகை வழங்கினால் புதிய முதலீடு எளிதாகும்! ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்ப்புகூடுதலாக செலுத்திய வரித்தொகை வழங்கினால் புதிய முதலீடு எளிதாகும்! ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
கூடுதலாக செலுத்திய வரித்தொகை வழங்கினால் புதிய முதலீடு எளிதாகும்! ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
கூடுதலாக செலுத்திய வரித்தொகை வழங்கினால் புதிய முதலீடு எளிதாகும்! ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
கூடுதலாக செலுத்திய வரித்தொகை வழங்கினால் புதிய முதலீடு எளிதாகும்! ஜவுளி தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு
நிலக்கரி மற்றும் லிக்னைட் மீதான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக இருந்தது, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும். அதன்படி, 2070ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தொழில்துறை துறையின், கார்பன் - டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றத்தை 1,5-20 சதவீதம் வரை குறைக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். ஜவுளிப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பருத்தி, சணல், பட்டு, கைத்தறி பொருட்கள் பயனடையும். பொது சுகாதார நலன்கருதி, புகையிலை பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., 28 சதவீதம், 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, இத்தகைய வரி உயர்வு மற்றும் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளை அதிக விலை கொண்டதாகவும் மாற்றுவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
உற்பத்தி மேம்படும்
செயற்கை நுாலிழை மற்றும் துணிக்கான வரி, 12 சதவீதமாக இருந்தது; 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பல்வேறு நெருக்கடிகள் தீரும். ஜவுளித்துறையினர் செலுத்திய கூடுதல் வரி, 'கிரெடிட் லெட்ஜர்'ல், கோடிக்கணக்கான ரூபாய் தேக்கமடைந்துள்ளது; அவற்றை திருப்பி கொடுக்க வேண்டும்.
மாற்றுவழி வேண்டும்
ஆயத்த ஆடை உற்பத்தி பயனடையும் வகையில், வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஜவுளித்துறைக்கும் நன்மை பயக்கும். சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கான வரியும் 12 சதவீதமாக இருந்ததை 5 சதவீதமாக குறைத்துள்ளனர்.
வாங்கும் திறன் அதிகரிக்கும்
ஜவுளித்துறைக்கு ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளரின் செலவு குறையும். திருப்பூர் குறு, சிறு நிறுவனங்களின் போட்டித்திறன் அதிகரிக்கும். விலை குறையும் என்பதால், வாங்கும் திறன் அதிகரிக்கும். தொழில்துறை வாய்ப்புகள் அதிகரிக்கும். செயற்கை நுாலிழை வரியும் குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு என்பது, செலவு குறைப்பு, சந்தை விரிவாக்கம், ஏற்றுமதி முன்னேற்றம் ஆகியவற்றின் மூலமாக திருப்பூருக்கு நன்மை அளிக்கும். தற்போதை மறுசீரமைப்பு என்பது, திருப்பூர் உற்பத்தி துறையை பன்மடங்கு வளர்ச்சி பெற ஊக்குவிக்கும்.
பெரிய மாற்றம் உருவாகும்
ஏற்றுமதி நிறுவனங்கள் செலுத்திய கூடுதல் வரி, கோடிக்கணக்கில் தேங்கியுள்ளது; பெரிய முதலீடு செய்ய வேண்டிய தொகை, கூடுதல் வரியாக, 'ரீ பண்ட் ' பெற முடியாமல் முடங்கியுள்ளது. இனிமேல் இப்பிரச்னை இருக்காது. உள்ளீட்டு வரியும், வெளியீட்டு வரியும் சமமாக இருப்பதால், பல்வேறு சிரமங்கள் குறையும்.