Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில்வே ஸ்டேஷனில் புதிய ஏ.சி., ஓய்வறை

ரயில்வே ஸ்டேஷனில் புதிய ஏ.சி., ஓய்வறை

ரயில்வே ஸ்டேஷனில் புதிய ஏ.சி., ஓய்வறை

ரயில்வே ஸ்டேஷனில் புதிய ஏ.சி., ஓய்வறை

ADDED : ஜூலை 03, 2025 08:28 PM


Google News
- நமது நிருபர் -

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்மில், முன்பதிவில்லா டிக்கெட் வழங்கும் அறை எதிரே, கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

தற்போது, பொதுமக்கள் நீண்ட துாரம் செல்வதற்கு அதிக அளவில் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். ரயில்வே துறையும் ரயில்வே ஸ்டேஷன் பயணியருக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது.

அவ்வகையில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், கட்டண குளிர்சாதன காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதில், குளியலறை, கழிப்பிடம், முற்றிலும் ேஷாபா ஹால், டீ, காபி, சிற்றுண்டி வசதி கொண்ட இந்த அறையை பயன்படுத்த ஒரு மணி நேரத்துக்கு, 25 ரூபாய் கட்டணம். 'வைபை' வசதி, அனைத்து ஆன்லைன் பேமெண்ட் வசதிகளும் உள்ளது.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி., பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இதுவரை ஏ.சி., ஓய்வறை வசதி இல்லை. ரயில் தாமதமானால், பயணிகள் பிளாட்பார்மில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில்வே ஸ்டேஷன் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதல் பிளாட்பார்மில் நுழைவு வாயிலில் ஏ.சி., ஓய்வறை திறக்கப்பட்டுள்ளது; இந்த வசதி வந்ததையடுத்து, பயணியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us