Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'நீட்' தேர்வு: அரசு பள்ளிகளில் உடுமலை மாணவர் முதலிடம்

'நீட்' தேர்வு: அரசு பள்ளிகளில் உடுமலை மாணவர் முதலிடம்

'நீட்' தேர்வு: அரசு பள்ளிகளில் உடுமலை மாணவர் முதலிடம்

'நீட்' தேர்வு: அரசு பள்ளிகளில் உடுமலை மாணவர் முதலிடம்

ADDED : ஜூன் 15, 2025 11:41 PM


Google News
திருப்பூர்; 'நீட்' தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. திருப்பூர் மாவட்டம், உடுமலை, மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் சாய்பிரசாத், 488 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

மீண்டும் தேர்வெழுதும் (ரிப்பீட்டர்ஸ்) பிரிவில், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தி, 508 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 386 பேர் நீட் தேர்வெழுதினர். அவரவர் பிறந்த தேதி விபரங்களை பதிவுசெய்து, தேர்ச்சி விபரங்களை அறிந்து வருகின்றனர்.

''மாவட்டத்தில் 'நீட்' தேர்வெழுதியவர்களின் மொத்த தேர்ச்சி நிலவரம், விரிவான விபரங்கள் இன்று தெரிய வரும்'' என, மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us