ADDED : பிப் 10, 2024 12:30 AM
காங்கயம் ஒன்றியம் நத்தக்காடையூரில், வாரச்சந்தை புதன்கிழமை தோறும் கூடுகிறது.
இந்த சந்தையில் 2024-25ம் நிதியாண்டில், சுங்கம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலம் காங்கயம் ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ., விமலாதேவி முன்னிலையில் நடந்தது. இதில் 5 ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஏலம் கோரினர். இறுதியாக துரைசாமி என்பவர் இந்த உரிமத்துக்கு 5 லட்சத்து 2 ஆயிரம் அதிகபட்ச தொகையாக ஏலம் கோரினார். அதற்கு மேல் யாரும் ஏலம் கோராத நிலையில், அவருக்கு அந்த உரிமம் வழங்கப்பட்டது.