Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குறுகலான ரோட்டால் பாதிப்பு; விரிவாக்கம் அவசியம்

குறுகலான ரோட்டால் பாதிப்பு; விரிவாக்கம் அவசியம்

குறுகலான ரோட்டால் பாதிப்பு; விரிவாக்கம் அவசியம்

குறுகலான ரோட்டால் பாதிப்பு; விரிவாக்கம் அவசியம்

ADDED : செப் 11, 2025 09:32 PM


Google News
உடுமலை; உடுமலை தேவனுார்புதுாரில் இருந்து செல்லப்பம்பாளையம் வழியாக செல்லும் ரோட்டில், உடுமலை மற்றும் பொள்ளாச்சியில், இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்ட எல்லை வரை, பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது.

ரோட்டின் இருபுறங்களிலும், மழைக்காலங்களில், மண் அரிப்பு ஏற்பட்டு, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், பஸ், லாரி உட்பட வாகனங்கள் வரும் போது, இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், நிலைதடுமாறி, விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

ரோடு குறுகலாக இருப்பதால், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் தேவனுார்புதுாரில் இருந்து செல்லப்பம்பாளையம் வழியாக செல்லும் ரோட்டை விரிவுபடுத்தி, ரோட்டோரத்தில், உள்ள குழிகளை சீரமைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us