Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் வரை மட்டும்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் வரை மட்டும்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் வரை மட்டும்

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் வரை மட்டும்

ADDED : பிப் 10, 2024 01:25 AM


Google News
திருப்பூர்;வரும் 15 முதல் 20ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (எண்:16322) திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்.

திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. பிப்., மூன்று மற்றும் நான்காவது வாரத்தில், தண்டவாளங்கள் இணைப்பு பணி நடக்கிறது. அந்த வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.

ஒன்பது ரயில்கள் இயக்கம் முழுமையாகவும், 38 ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (எண்:16322) ரயில் வரும் 15 முதல் 20ம் தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும்; மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் ஸ்டேஷன்களுக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us