Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாக்குறுதி நிறைவேற்றம்; அமைச்சர் பெருமிதம்

வாக்குறுதி நிறைவேற்றம்; அமைச்சர் பெருமிதம்

வாக்குறுதி நிறைவேற்றம்; அமைச்சர் பெருமிதம்

வாக்குறுதி நிறைவேற்றம்; அமைச்சர் பெருமிதம்

ADDED : மே 26, 2025 06:08 AM


Google News
பல்லடம்; பல்லடம் நகராட்சிக்குட்பட்ட, செம்மிபாளையம், பணிக்கம்பட்டி, ஆறுமுத்தாம்பாளையம், கே.அய்யம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பணிகளில், 198 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கவுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் துவக்க விழா நடந்தது. ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மலர்விழி தலைமை வகித்தார்.

திட்டப்பணிகளை துவக்கி வைத்த பின் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

தமிழக முதல்வர், பொதுமக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மாவட்டத்தில் நடந்து வரும் அனைத்து திட்டப்பணிகளும் உடனடியாக மக்களுடைய பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், மாணவர்கள் என, பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் வேகம் காட்டி வருகிறார்.

இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

முன்னதாக, பல்வேறு திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. பி.டி.ஓ, பானுப்பிரியா, உதவிப் பொறியாளர் சண்முக வடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us