Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாரியம்மன் திருவிழா

மாரியம்மன் திருவிழா

மாரியம்மன் திருவிழா

மாரியம்மன் திருவிழா

ADDED : மே 20, 2025 11:43 PM


Google News
உடுமலை; கணியூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. அன்று விநாயகர் பொங்கல் மறுநாள் மினியப்பன் பொங்கல் வைக்கப்பட்டு வழிபாடு துவக்கப்பட்டது. தொடர்ந்து மே 13ம்தேதி நோன்பு சாட்டப்பட்டது. நேற்று இரவு கம்பம் போடப்பட்டது. கம்பத்துக்கு பக்தர்கள் தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26ம்தேதி பூவோடு வைத்தல் நடக்கிறது. மறுநாள் சுவாமிக்கு அபிேஷக அலங்காரத்துடன் சிறப்பு பூஜை மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 28ம்தேதி பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், பூவோடு எடுத்தும் வழிபாடு நடத்துகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us