ADDED : செப் 01, 2025 02:05 AM
பர்கூர்:கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள், பர்கூர் அருகே, மேல் சீனிவாசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த
போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக, ஐங்குந்தம் கிராமத்திலிருந்து வேலம்பட்டி பகுதிக்கு, கற்களை ஏற்றி செல்வது தெரிந்தது. அதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், பர்கூர்
போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.