ADDED : செப் 23, 2025 11:58 PM
காங்கயம்; காங்கயம் - தாராபுரம் ரோட்டில் மாவட்ட கனிம வளத்துறை ஆர்.ஐ., எத்திராஜ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதில், தனியாருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் அனுமதி சீட்டு ஏதுமின்றி கிராவல் மண் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டு, தப்பி சென்ற டிரைவர், லாரி உரிமையாளர் குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.