/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேண்டுகோள்அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேண்டுகோள்
அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேண்டுகோள்
அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேண்டுகோள்
அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேண்டுகோள்

பாதுகாப்பில் கவனம்
போலீசாருக்கு வழங்கப்பட்ட பணியில், வரும், 29 முதல், அடுத்த மாதம், 2ம் தேதி இரவு வரை, யாக சாலைக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அன்றைய நாட்களில், கோவிலுக்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
சுகாதாரத்துக்குமுன்னுரிமை
அவிநாசி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி நிர்வாகத்தினர், கோவில் வளாகம், யாக சாலை சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கோவில் வளாகம் அருகில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்து, தேவையான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். தேவையான இடங்களில் தற்காலிக கழிவறை அமைக்க வேண்டும்.
ஸ்திரத்தன்மை அவசியம்
பக்தர்கள் பாதுகாப்பு கருதி, கோவில் விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களில் கட்டப்படும் மூங்கில் சாரங்கள், படிகள் உள்ளிட்ட கட்டுமானங்களின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து, சான்று வழங்க வேண்டும்.
அன்னதானம்
மருத்துவ துறையினரை பொறுத்தவரை, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், நோய் தொற்று பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசம்பாவிதம் கூடாது
மின்வாரியத்தினர், விழா நாட்களில், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். கோவில் வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்வதற்கு போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.