Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கண் ஆபரேஷனுக்கு கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

கண் ஆபரேஷனுக்கு கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

கண் ஆபரேஷனுக்கு கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

கண் ஆபரேஷனுக்கு கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

ADDED : ஜூன் 06, 2025 12:40 AM


Google News
- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்டம், உடுமலை, காந்தி நகர் 2வது காலனியை சேர்ந்தவர் ஆனந்தன்,67; இவர், கோவை, ஆர்.எஸ்.புரத்திலுள்ள, மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.

இந்நிலையில், அவரது சகோதரிக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதால், தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான சிகிச்சை கட்டணம் 60ஆயிரம்ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். பணம் வழங்க காலதாமதம் செய்தனர்.

இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடுசெய்துள்ளதால், சிகிச்சை கட்டணம், 60ஆயிரம்ரூபாய் வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக,10ஆயிரம்ரூபாய், வழக்கு செலவு, ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us