ADDED : பிப் 12, 2024 12:53 AM
வெள்ளகோவில், முத்துார், காங்கயம், புதுப்பை பகுதிகளில் செடி முருங்கை, மர முருங்கை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதை வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
நேற்று, பத்து டன் வரத்து இருந்தது. மர முருங்கை கிலோ 20 ரூபாய்; செடி முருங்கை 25 ரூபாய்; கரும்பு முருங்கை 40 ரூபாய்க்கு விற்பனையானது.