ADDED : ஜூன் 02, 2025 06:16 AM
ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட குழு சார்பில், குமரன் சிலை முன்பு, கையெழுத்து இயக்கம் நடந்தது.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், அமைதி வேண்டியும் நடந்த கையெழுத்து இயக்கத்துக்கு, மாவட்ட தலைவர் அருள் தலைமை வகித்தார். மாநில தலைவர் கார்த்திக், கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்து பேசினார். பொதுமக்கள் திரளானோர் கையெழுத்திட்டனர்.