ADDED : ஜன 27, 2024 11:46 PM

திருப்பூர்;எஸ்.ஆர்., நகரில் நடந்த பொங்கல் விழா கோலப்போட்டியில், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்., நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 7ம் ஆண்டு பொங்கல் விழா நேற்று துவங்கியது.
முதல் நிகழ்ச்சியாக, கோலப்போட்டி நடந்தது; நுாற்றுக்கும் அதிகமான பெண்கள், சிறுமியர் இணைந்து, 86 கோலங்களை வரைந்தனர்.
வண்ணமயமான கோலங்களை நடுவர் குழு பார்வையிட்டு, சிறப்பான நான்கு கோலங்களை தேர்வு செய்தது.
பங்கேற்ற அனைவருக்கும், எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இன்று, சிறுவர் - சிறுமியர், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும், 50 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோருக்கான போட்டிகளும் நடக்க உள்ளன.