குப்பை பிரச்னை: நிரந்தர தீர்வு சாத்தியமாகுமா?
குப்பை பிரச்னை: நிரந்தர தீர்வு சாத்தியமாகுமா?
குப்பை பிரச்னை: நிரந்தர தீர்வு சாத்தியமாகுமா?
குப்பை பிரச்னை: நிரந்தர தீர்வு சாத்தியமாகுமா?

பாறைக்குழயில் கொட்ட எதிர்ப்பு : தீர்வுக்கு முனைகிறது மாநகராட்சி
மாநகரத் துாய்மைப் பணி மக்கள் இயக்கமாகட்டும்
அனைத்து வீடுகளிலும், 100 சதவீதம் குப்பை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிப்பது; பொதுமக்கள் மத்தியில் மாணவர்கள் மற்றும் துாய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. மக்கும் கழிவுகள் வாரம் முழுவதும் சேகரிப்பதோடு, மக்காத குப்பைகள் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் பெறுவது; பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்புவது. குப்பைகளை துாய்மைப் பணியாளர்களிடம் வாகனங்களில் மட்டுமே வழங்க வேண்டும். வெளியிடங்களில் எங்கும் குப்பை கொட்டுவது தடுக்கப்படும். மீறும் பட்சத்தில் விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும். பகுதி வாரியாக அதிகம் குப்பை குவியும் இடங்கள் கண்டறிந்து தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்வது; அந்த இடங்களில் செடிகள் வளர்ப்பது; எந்த பகுதியிலும் குப்பைத் தொட்டியே இல்லாத வகையில் நடவடிக்கை எடுப்பது. இரண்டு வார்டுகளுக்கு ஒரு பரப்புரையாளர் நியமித்து வீடு வீடாகச் சென்று குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்து விளக்குவது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு இதைச் செயல்படுத்தவும் முனைப்பு காட்டப்படுகிறது.
100 கிலோ கழிவுகள் சேகரமாகும் நிறுவனங்களுக்கு தேவை அக்கறை
அனைத்து வார்டுகளிலும், உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் கணக்கெடுத்து அவற்றில் சேகரமாகும், மக்கும் மற்றும் மக்காத கழிவுகள் தனியாக சேகரிக்கப்படும்.நிறுவனங்களில் இருத்து சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகள் நுண் உரமாக்கல் மைய மேலாண்மை செய்யப்பட்டு உரமாக மாற்றப்படும்.ஐந்தாயிரம் சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட அல்லது தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தியாகும் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், உணவகங்கள், விடுதிகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் பல்க் வேஸ்ட் ஜெனரேசன் என்ற வகையில் கொண்டு வருவது; அவற்றுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிப்பது; இதை செய்ய இயலாத நிறுவனங்களிடம் உரிய கட்டணம் பெற்று கழிவுகளை பெற்றுக்கொள்வது.


