ADDED : ஜூன் 30, 2025 12:31 AM

l நிகழ்ச்சி அரங்குக்கு முதலாவதாக வந்த மாணவி, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக குத்துவிளக்கேற்றினார்.
l நிகழ்ச்சி துவங்கும் முன்பே ஆர்வமுடன் பெற்றோர் தங்கள் மகன், மகளை, அவர்களது இன்ஜி., கனவை நனவாக்கும் ஆவலுடன் அழைத்து வந்திருந்தனர்.
l திருப்பூர் நிகழ்ச்சியில் பங்கு பெற முடியாத மகளுக்காக தந்தை ஒருவர் நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர்கள் பேசுவதை முழுவதையும் வீடியோ எடுத்து கொண்டார்.
l கல்வி ஆலோசகர்கள் பேசிய பின், அவர்களிடம் கவுன்சிலிங், உயர்படிப்பு குறித்த சந்தேகங்களை பெற்றோர், மாணவ, மாணவியர் கேட்டறிந்தனர்.
l உயர்கல்வியில் ஒவ்வொரு பிரிவினருக்கும் (எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி.,) என்னென்ன மதிப்பெண், எவ்வளவு இடங்கள் என்பது குறித்த விபரம் பவர்பாயின்டில் ஒளிபரப்பப்பட்டது. அதை பெற்றோர், மாணவர்கள் மொபைல் போனில் போட்டோ எடுத்துக் கொண்டனர்.