/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்!விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்!
விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்!
விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்!
விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும்!

பாமாயில் இறக்குமதிக்கு தடை தேவை
செல்லமுத்து (மாநில தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி): கடந்த 2023ம் ஆண்டு, வேதனைகளும், சோதனைகளுமாக முடிந்து விட்டது. ஆங்கிலப் புத்தாண்டில், எல்லா நலமும் வளமும் கிடைக்க வேண்டும். மக்களுக்காக உழைக்கும் உழவர்களின் வாழக்கை நலிவடைந்து உள்ளது. விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிகளுக்கு மத்திய அரசு சலுகைகள் அளிக்க வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை செய்து, தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும். பயிர் மற்றும் விவசாய மராமத்து கடன் உள்ளிட்ட பல்வேறு விவசாய கடன்களை முறைப்படுத்த வேண்டும். இலக்குகளை எட்ட வேண்டும் என்பதற்காக, பெயரளவுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன. போர்க்கால அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
நதிகள் தேசிய மயமாகுமா?
ஈஸ்வரன் (திருப்பூர் மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்): தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், பாமாயில் விற்பனையை நிறுத்தி, தேங்காய் எண்ணெய் விநியோகத்தை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு துறைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள், தொழில்நுட்ப கருவிகள் தரமானதாக இல்லை. விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை போன்றே, வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கான மானிய தொகையையும், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்த வேண்டும்.
விவசாயிகளிடம் நேரடி கொள்முதல்
ஈசன் முருகசாமி (நிறுவன தலைவர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்): விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விளை பொருட்களுக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணை பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்கி, விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மத்திய, மாநில அளவில் அரசியல் அமைப்பு சட்ட ரீதியான, விவசாயிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கட்டணமில்லா வேளாண் மின்சாரம் வழங்க வேண்டும். 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய நிலமெடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நிலம் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். நுாறு நாள் திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்துமாறு மாற்றி அமைக்க வேண்டும்.