ADDED : மே 26, 2025 06:20 AM

விவேகானந்தா சேவா அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம், திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நேற்று நடந்தது. அறக்கட்டளை செயலாளர் எக்ஸ்லான் ராமசாமி முகாமை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.
முகாமில், 552 பேர் பங்கேற்றனர்; 76 பேர் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு கண் புரைநோய், நீர் அழுத்த நோய், மாலைக்கண், மாறுகண், துாரப்பார்வை குறித்து இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.