ADDED : ஜன 02, 2024 11:31 PM
உடுமலை:உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், இன்று (3ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.