ADDED : ஜூன் 09, 2025 12:21 AM
திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோவில், முத்துார் மூலனுார், தாராபுரம், காங்கயம், புதுப்பை பகுதிகளில் செடி முருங்கை, மர முருங்கை, கருப்பு முருங்கை ஆகிய முருங்கை ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அவை, வெள்ளகோவிலில் உள்ள முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த முருங்கைக்காயை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
வியாபாரிகள் அவற்றை வாங்கி கோவை, சென்னை உள்ளிட்ட மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். நேற்று இரண்டு டன் அளவு முருங்கை வரத்து இருந்தது. கருப்பு முருங்கை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது.