Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரும் 28ல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வரும் 28ல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வரும் 28ல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம்

வரும் 28ல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம்

ADDED : மார் 23, 2025 09:56 PM


Google News
உடுமலை : திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும், 28ம் தேதி நடக்கிறது.

திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 28ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், அறை எண், 240ல், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடக்கிறது.

இக்கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களும், விவசாயிகளும் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில், விவசாயிகள் நுண்ணீர்ப்பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு வழிகாட்டும் வகையில், வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்ட வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது.

இந்த மையத்தின் வாயிலாக, நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us