Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநகராட்சியில் நேரடி சம்பளம்

மாநகராட்சியில் நேரடி சம்பளம்

மாநகராட்சியில் நேரடி சம்பளம்

மாநகராட்சியில் நேரடி சம்பளம்

ADDED : மே 14, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி அம்பேத்கர் துாய்மை பணியாளர் மற்றும் ஒப்பந்த டிரைவர்கள் தொழிற்சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

ஒப்பந்த நிறுவனம், துாய்மை பணியாளருக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில்லை. தற்காலிக துாய்மை பணியாளராக, 2000 பேர் பணியாற்றுகிறோம். பிடித்தம் செய்யப்படும் இ.எஸ்.ஐ., - பி.எப்., சந்தாவுக்கான ரசீது வழங்கப்பட வேண்டும்.துாய்மை பணிக்கான வாகனங்கள் பழுதாகி ஓரம்கட்டப்பட்டுள்ளன; பழுதுநீக்கி, மீண்டும் பயன் பாட்டுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்த நிறுவனத்துக்கு பதிலாக, மாநகராட்சி நிர்வாகமே 60 வார்டுகளிலும் துாய்மை பணியை நேரடியாக மேற்கொண்டால், பலகோடி ரூபாய் செலவு குறையும்.

மாநகராட்சி நிர்வாகமே, அனைத்து வாகனங்களையும் பராமரிக்க ஆட்களை நியமிக்க வேண்டும். சரியாக குப்பை சேகரிக்காமலும், துாய்மை பணி மேற்கொள்ளாமலும், 60 வார்டுகளிலும், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது. தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய, மாநகராட்சி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us