Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிவாலயங்களில் பிரதோஷம் வழிபட்டு பக்தர்கள் பரவசம்

சிவாலயங்களில் பிரதோஷம் வழிபட்டு பக்தர்கள் பரவசம்

சிவாலயங்களில் பிரதோஷம் வழிபட்டு பக்தர்கள் பரவசம்

சிவாலயங்களில் பிரதோஷம் வழிபட்டு பக்தர்கள் பரவசம்

ADDED : செப் 06, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், பிரதோஷ சிறப்பு வழிபாட்டில், உமாமகேஸ்வரர் பிரகார உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஆவணி மாத வளர்பிறை பிரதோஷமான நேற்று, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி முருகநாத சுவாமி கோவில், நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில்; அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில்,ஊத்துக்குளி ரோடு காசிவிஸ்வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 4:00 மணிக்கு மூலவர் அபிேஷகம், அதிகாரி நந்தி அபிேஷகம், உமாமகேஸ்வரர் உற்சவமூர்த்திகள் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார பூஜைகள் நடந்தன.

உற்சவமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பிரகார உலா வந்து அருள்பாலித்தனர். பக்தர்கள், 'ஓம் நமசிவாய...' என்ற கோஷத்துடன் பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us