Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்

போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்

போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்

போலீஸ் துணை கமிஷனர் இடமாற்றம்

ADDED : மார் 26, 2025 12:21 AM


Google News
திருப்பூர்; தமிழகம் முழுவதும், 15 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகர வடக்கு துணை கமிஷனராக இருந்த சுஜாதா, ஈரோடு மாவட்டம் எஸ்.பி., யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருப்பூர் மாநகரில் நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்.,) போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், வடக்கு ஸ்டேஷனில் இருந்த எஸ்.எஸ்.,ஐ., கணேஷ்பாண்டி, வடக்கு சட்டம் - ஒழுங்கு, சென்ட்ரல் குமாரவேல், தெற்குக்கும், வீரபாண்டி செந்தில்குமார் வடக்குக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சென்ட்ரலில் இருந்த மகாதேவன், வேலம்பாளையத்தில் இருந்த கார்த்திகேயன் ஆகியோர் வடக்கு ஐ.எஸ்., போலீசாகவும், தெற்கில் இருந்து ராஜசேகர், சென்ட்ரல் ஐ.எஸ்., ஆகவும், வடக்கில் இருந்த ராஜேஷ்குமார்,வீரபாண்டி ஐ.எஸ்., ஆகவும் இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us