Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வீதிகளில் கடைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வீதிகளில் கடைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வீதிகளில் கடைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வீதிகளில் கடைகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ADDED : ஜூன் 21, 2025 12:36 AM


Google News
உடுமலை : உடுமலை நகர வணிக வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலை நகரில், பசுபதி வீதி, சீனிவாசா வீதி, வ.உ.சி., வீதி, கல்பனா ரோடு, ராஜேந்திரா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன. இந்த பகுதிகள், நகரின் மையமாகவும் இருப்பதால், பிரதானமான வழித்தடமாகவும் உள்ளன.

நாள்தோறும், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் அப்பகுதிகளை கடந்து செல்கின்றனர். தற்போது வணிக கடைகளின் ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் தொடர்ந்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகனங்கள் நிறுத்துவதற்கு ரோட்டோரத்தில் விடப்பட்டுள்ள இடைவெளியை, பல வணிக கடைகளில், பொருட்களை வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால், வாகன ஓட்டுனர்கள் ரோட்டை மறித்து வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினர் இந்த பகுதிகளில் ஆய்வு நடத்தி, ரோட்டை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us