/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரூ.1.69 கோடி பறித்த குற்றவாளிகள்; சிக்கிய பரபரப்பு பின்னணி!ரூ.1.69 கோடி பறித்த குற்றவாளிகள்; சிக்கிய பரபரப்பு பின்னணி!
ரூ.1.69 கோடி பறித்த குற்றவாளிகள்; சிக்கிய பரபரப்பு பின்னணி!
ரூ.1.69 கோடி பறித்த குற்றவாளிகள்; சிக்கிய பரபரப்பு பின்னணி!
ரூ.1.69 கோடி பறித்த குற்றவாளிகள்; சிக்கிய பரபரப்பு பின்னணி!

பேராசை காரணம்
திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் கூறியதாவது:
ஆறு மாத ஒத்திகை
மோசடிக்கும்பல் கடந்த, ஆறு மாதமாக இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டனர். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால், போலீசார் எதையெல்லாம் பின்பற்றி விசாரித்து பிடிப்பார்கள் என, ஒவ்வொரு விஷயமாக அலசி ஆராய்ந்து திட்டம் தீட்டினர். போலீசிடம் சிக்காத வகையில், வேறு நபரின் பெயரில் உள்ள மொபைல் எண்ணை பயன்படுத்தியது. 'வாட்ஸ்அப்' காலில் தொடர்பு கொள்வது என தொழில்நுட்பரீதியாக திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர்.
சவாலில் வென்ற போலீஸ்
ஏழு நாட்களில் குற்றவாளிகளை பிடித்து பெரும்பகுதி பணத்தை மாநகர தனிப்படை போலீசார் மீட்டனர். ஆரம்பத்தில், கும்பல் கையாண் டுள்ள சில தொழில்நுட்பரீதியான விஷயங்களால், தடயங்கள் எதுவும் கிடைக்காமல், பெரிய சவாலாக இருந்தது. அதை முறியடிக்கும் வகையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, குழுக்களாக பிரிந்து சிறப்பாக செயல்பட்டு அந்த கும்பலை கொத்தாக பிடித்து பணத்தை மீட்டது. போலீசாரிடம் சிக்கிய குற்றவாளிகள், 'எங்களை யாருமே பிடிக்கல, எப்படி சார் நீங்க கண்டுபிடிச்சீங்க' என்று வியப்புடன் கேட்டார்களாம்.