ADDED : மார் 24, 2025 05:42 AM
திருப்பூர், குமரானந்தபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் ருக்மணி, முன்னிலை வகித்தார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, வரவேற்றார். மேயர் தினேஷ் குமார், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
துணை மேயர் பாலசுப்பிரமணியம், கவுன்சிலர் பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.